31 Aug 2014

அம்மா அம்மா நீ எங்க அம்மா





அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
தேடி பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணாம்பூச்சியே வா நீ வெள்ள
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்கவேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ
உன் கண்கள் திறந்தாலே போதும்
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா




நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
அய்யோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கின் துணை இன்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையனாதே
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா



நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வான் எங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பெரிதில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணை சேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை



அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்கவேணும்
நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்



பாடியவர்கள் : தனுஷ் , ஜானகி
இசை : அனிருத்
பாடலாசிரியர் : தனுஷ்
படம் : வேலை இல்லா பட்டதாரி

No comments:

Post a Comment