24 Aug 2014

தாம் தூம்





அன்பே என் அன்பே உன் விழி பார்க்க 
இத்தனை நாளா தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்றில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்




நீ நீ ஒரு நதி அலை ஆனாய் 
நான் நான் அதில் விழும் நிழல் ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைதிடுவேனோ
மழையினிலே பிறகும் நதி 
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெலாம்
மௌனத்திலே கலக்கும்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளா தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்



நீ நீ புது கட்டளைகள் விதிக்க 
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பனே
எதை கொடுத்தோம்  எதை எடுத்தோம் 
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் 
புரியவில்லை நமக்கு
 



அன்பே என் அன்பே உன் விழி பார்க்க 
இத்தனை நாளா தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்றில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்




பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் , பா.விஜய்

No comments:

Post a Comment