நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே திறந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சேர்த்துவிடும்
ஓ... கதவுகளை திருடிவிடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கைகோர்த்து சேர்ந்தது
இடையில் பொய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோாம்
ஓ... இன்றேனோ நம் மூச்சின்
மென் காற்றில் நின்றுவிட்டோம்
இதயம் ஒன்றாகிப் போனதே
கதவே இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே திறந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி
பாடியவர்கள்:ஹரிசரண் வந்தனா
இசை:ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
No comments:
Post a Comment