6 Sept 2014

சில்லென ஒரு மழை துளி






சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஓஹோ...
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஹோய்...
நான் மாறினேன் கண்ணே



அட கருபட்டியே என் சீனி கிழங்கே
சிரிச்சி கவுக்காத
என் கண்ணுகுட்டியே கம்மா கரையே
நீ கப்பல் ஒட்டாத
கண்ணால பாக்காம கண்ணாலம் பன்னலாமா?
கை கோர்த்து போலாமா?




கொஞ்சம் பார்த்து விடு
கொஞ்சம் பேசி விடு என்று
என் விழிகள் ஹய்யய்யோ என்னை திட்ட
கோடை கால மழை
வந்து போன பின்னும்
சாலையோரம் மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
உன்னாலே... நூலில்லா
காற்றாடி ஆனேனே...
அடி பெண்ணே... அடி கண்ணே...
நான் விழுந்தால் உன்பாதம் சேர்வேனே
உன் விழிகளிலே ஓஹோ...
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஹோய்...
நான் மாறினேன் கண்ணே
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே



காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்தடி
மீண்டும் நான் பிழைக்க
முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும்
கிறங்க வைகுதடி மீண்டும் ஒருமுறை
நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே
நிழல் கூட அழகின் நகலே
ஒரு நாளும்மம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
குறையாத ஓஹோ.....
புது போதை கண்ணோரம் தந்தாயே
அனைத்தாலும் அணையாத
ஒரு தீயாய் நெஞ்சோரம் வந்தாயே  
அடி இடம் வலமா...
நான் ஆடினேன் பெண்ணே...
ஒரு இடி மழையாய்
என்னை தாக்கினாய் முன்னே




பாடியவர்: அல்போன்ஸ் , கிளிண்டன்  சிரேஜோ , அல்கா  
இசை:ஜி .வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : நா : முத்துக்குமார்
படம்: ராஜா ராணி

No comments:

Post a Comment