16 Sept 2014

மருதாணி மருதாணி






மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
கங்கை என்ற காணலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்




அவன் இதய வீட்டில் வாழும்அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட  மாட்டான்
சுடு நீரும் சுடு சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமித்தான்
ஒ.. ஒ... த ர அர ரா
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி
மருதாணி விழியில் ஏன்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி


கங்கை என்ற காணலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது




ஒ... ஒ... அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய் போலே
எந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஒ.. ஒ... த ர அர ரா
ஆகா மொத்தம் அவசர கோலம்
மருதாணி மருதாணி
அடி போடி தீபாலி




கங்கை என்ற காணலை காட்டும்
காதல் கானல் என்று கங்கை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்



பாடியவர்கள் :  மதுஸ்ரீ, ஏ. ஆர். ரஹ்மான், ஹென்றி
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : வாலி
படம்: சக்கரகட்டி

6 Sept 2014

சில்லென ஒரு மழை துளி






சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஓஹோ...
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஹோய்...
நான் மாறினேன் கண்ணே



அட கருபட்டியே என் சீனி கிழங்கே
சிரிச்சி கவுக்காத
என் கண்ணுகுட்டியே கம்மா கரையே
நீ கப்பல் ஒட்டாத
கண்ணால பாக்காம கண்ணாலம் பன்னலாமா?
கை கோர்த்து போலாமா?




கொஞ்சம் பார்த்து விடு
கொஞ்சம் பேசி விடு என்று
என் விழிகள் ஹய்யய்யோ என்னை திட்ட
கோடை கால மழை
வந்து போன பின்னும்
சாலையோரம் மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
உன்னாலே... நூலில்லா
காற்றாடி ஆனேனே...
அடி பெண்ணே... அடி கண்ணே...
நான் விழுந்தால் உன்பாதம் சேர்வேனே
உன் விழிகளிலே ஓஹோ...
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஹோய்...
நான் மாறினேன் கண்ணே
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே



காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்தடி
மீண்டும் நான் பிழைக்க
முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும்
கிறங்க வைகுதடி மீண்டும் ஒருமுறை
நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே
நிழல் கூட அழகின் நகலே
ஒரு நாளும்மம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
குறையாத ஓஹோ.....
புது போதை கண்ணோரம் தந்தாயே
அனைத்தாலும் அணையாத
ஒரு தீயாய் நெஞ்சோரம் வந்தாயே  
அடி இடம் வலமா...
நான் ஆடினேன் பெண்ணே...
ஒரு இடி மழையாய்
என்னை தாக்கினாய் முன்னே




பாடியவர்: அல்போன்ஸ் , கிளிண்டன்  சிரேஜோ , அல்கா  
இசை:ஜி .வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : நா : முத்துக்குமார்
படம்: ராஜா ராணி

5 Sept 2014

ஆராரோ ஆரிரோ





ஆராரோ ஆரிரோ
அம்புலிக்கு நேர் இவரோ
தாயான தாய் இவரோ
தங்க ரதத் தேர் இவரோ




மூச்சுபட்டா நோகுமுன்னு
மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு
நிலவடங்க முத்தமிட்டேன்




தூங்காமணி விளக்கே
தூங்காம தூங்கு கண்ணே
ஆச அகல் விளக்கே
அசையாமல் தூங்கு கண்ணே




ஆராரோ ஆரிரோ...
ஆராரோ ஆரிரோ...
ஆராரோ ஆரிரோ...
ஆராரோ ஆரிரோ...





பாடியவர் : ஸ்ரீவர்தினி
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார
படம்: சிறுத்தை