வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளித் தருவேன்
அட அடடடடா ஓ...
அட அடடடடா ஓ...
நுண் சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா
அட அடடடடா ஓ...
அட அடடடடா ஓ...
ஒருமுறை பார்ப்பாயா
இருதய பேச்சை கேட்பாயா
அட அடடடடா ஓ...
அட அடடடடா ஓ...
உன் பூத கண்ணாடி தேவை இல்லை
என் காதல் நீ பார்க்க கண் போதுமே
முத்தங்கள் தழுவல்கள் தேவை இல்லை
நீ பார்க்கும் நிமிடங்கள் அது போதுமே
கோபம் ஏக்கம் காமம் வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி
ஒருமுறை பார்ப்பாயா
இருதய பேச்சை கேட்பாயா
மறுமுறை பார்ப்பாயா
விழிகளில் காதல் சொல்வாயா
அட அடடடடா ஓ...
அட அடடடடா ஓ...
பாடியவர் : கார்த்திக்
இசை : ம. ம. கீரவாணி
பாடலாசிரியர் : மதன் கார்கி
படம் : நான் ஈ
No comments:
Post a Comment