28 Nov 2014

மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்



ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே


நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தம் இல்லை
நினைபதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே
ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று


நெருங்க நினைக்கும் நினைவை மறைக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேறை என்ன செய்வாய்
கடையை உடைத்து முறிக்கும்போது
அன்பே எங்கு செல்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வது எல்லாம்
மரத்தடி நிழலுக்கு சொந்தம் இல்லை
உன்னோடு நன் வாழ போராடுவேன்
நீ இன்று போனாலும் தல்லாடுவேன்


ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே


பாடியவர்கள்: சின்மயி , ஹரிஹரன்
பாடலாசிரியர்: பா.விஜய்
இசை: எஸ்.எ.ராஜ்குமார்
படம்: வசீகரா

19 Nov 2014

உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள்





அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமைரெண்டும் கைகள் தட்டுதே
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்




நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள்ரெண்டும் கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம் உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம் எங்கேன கேட்குதடி
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்



ஹே வானம் மீது போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல  வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி
பூவில் ஆடும் பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்



பாடியவர்:சித்தராத்
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
இசை:தேவி ஸ்ரீ பிரசாத்
படம்:சந்தோஷ் சுப்பிரமணியம்


18 Nov 2014

அன்பே உன்னால் மனம் freezing




அன்பே உன்னால் மனம் freezing 
அடடா காதல் என்றும் amazing Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங் 
நீ வீசும் அம்பு என் மேல் பாய 
காதல் வந்து என்னை ஆள 
வருவாயோ என்னை காப்பாற்ற 
வந்தால் மடி சாய்வேன் வாழ 




ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி குதுகளி
எனக்கும் உனக்குமாய் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை ரசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி
அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா
என்றுமே நீதானா (ஹசிலி..) 




உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊருது ஆசை 
அதுங்காமல் இதுங்காமல் 
இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை 
இரு விழியே ஏவுகணை 
உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை 
உடைந்திடுமோ சேரு எனை
நீ என்னை தீண்டினாய் வெப்பமா 
நான் உனக்கு பூக்களின் உப்புமா 
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்  (ஹசிலி..) 



உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே 
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே 
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ 
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ
நீ ஆடை பாதியாய் ஆள் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா வெக்கை தீயா (ஹசிலி..)


பாடியவர்கள்: கார்த்திக்,ஹரிணி
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: ஆதவன்
பாடலாசிரியர்:பா.விஜய்



14 Nov 2014

மின்சார பூவே பெண் பூவே




மின்சார  பூவே  பெண்  பூவே
மெய்  தீண்ட  வேண்டும்
என்னோடு  வாராய்
என்  ஆசை  ஒசைகேலாய்
மாலையில்  பொன்  மார்பினில்
நான்  துயில்  கொள்ள  வேண்டும்
காலையில்  உன்  கண்களில்
நான்  வெயில்  காய வேண்டும்
சகியே , சகியே , சகியே
என்  மீசைக்கும்  ஆசைக்கும்
பூசைக்கும்  நீ  வீண்டும்




மின்சாரா  கண்ணா
என்  மன்னா
என்  ஆணை  கேட்டு
என்  பின்னே  வாராய்
என்  ஆசை  ஓசை  கேளாய்
கூந்தலில்  விழும்  பூக்களை
நீ  மடியேந்த  வேண்டும்
நான்  விடும்  பெருமூச்சிலே
நீ  குளிர்  காய  வேண்டும்
மதனா , மதனா , மதனா

என்  பூவுக்கும்  தேவைக்கும்
சேவைக்கும்  நீ  வேண்டும்



ஒரு  ஆணுக்கு  எழுதிய
இலக்கணம்  உன்னிடத்தில்  கண்டேன்
என்  பாதத்தில்  பள்ளிகொள்ள
உனக்கொரு  அனுமதி  தந்தேன்
என்  ஆடை தாங்கிக்கொள்ள
என்  கூந்தல்  ஏந்திக்கொள்ள
உனக்கொரு  வாய்ப்பல்லவா ?
நான்  உண்ட  மிச்சபாலை
நீ  உண்டு  வாழ்ந்து  வந்தால்
மோட்சங்கள்  உனக்கல்லவா ?
வானம்  வந்து  வழிகிறதே
வணங்கிடவா


வெண்ணிலவை  தட்டித்தட்டி
செய்து  வைத்த  சிற்பம்  ஒன்று கண்டேன்
அதன்  விழியில்  வழிவது
அமுதமல்ல  விடம்  என்று  கண்டேன்
அதன்  நிழலையும்  தொடுவது
பழியென்று  விலகிவிட்டேன்
வான்  விழியால்  வலை  விரித்தாய்
வஞ்சனை  செல்லாது
வலைகளியே  மீன்  சிக்கலாம்
தண்ணீர்  என்றும்  சிக்காது
வா  என்றால்  நாள்  வருதில்லை
போ  என்றா லாகூர்  நான்  மறைவதில்லை
இது  நீ  நான்  என்ற  போட்டி அல்ல
நீ  ஆணையிட்ட  சூடிக்கொள்ள
ஆண்கள்  யாரும்  பூக்கலல்ல




பாடியவர்கள் : நித்யஸ்ரீ , மகாதேவன் , ஸ்ரீநிவாஸ் , ஸ்ரீராம்
இசை : ஏ . ஆர் . ரஹமான் 
பாடலாசிரியர்: வைரமுத்து
படம்: படையப்பா






2 Nov 2014

முழுமதி அவளது முகமாகும்



முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
ஓ..ஹோ...




முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே
ஓ..ஹோ...




முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்




அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா
ஓ..ஹோ...




முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்




பாடியவர் :ஸ்ரீநிவாஸ்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
படம்:ஜோதா அக்பர்